Sunday, April 9, 2017

குறுங்கவிதைகள் பகுதி 3

உன் பணம் எனக்கு வேண்டாமென
ரோசத்தோடு துப்புகிறது
ஏடிஎம்!

தனக்கு ஒரு விலைவந்ததும்
தண்ணீர்க்குடங்குளும்
தலைகீழாய்த்தான் நிற்கின்றன!

எங்கள்சாலையோர மரங்கள்
வேர்களில் விளைவிக்கின்றன
காலி மதுப்புட்டிகளை!

கிரீஸ் தடவப்பட்டன
சாலைகளில்
சிறுமழைக்குப்பின்!

கசங்கிய மலர்ப்பாதை
நிறைவடைந்தது
மயானம்!

ஒரு வாடகைத்தாய்
பயணம் செய்கிறாள்.
அந்த ஆட்டோவின் பின்னே
எழுதப்பட்டிருந்தது
பிரசவத்திற்கு இலவசம்!

கருவில் இருக்கும் குழந்தை
ஆணா பெண்ணா என்றறிவது
சட்டப்படி குற்றம்
பின்குறிப்பு:
அழிப்பது குற்றமல்ல!

மூத்திரசந்துகள்
அனுமதி
ஆண்களுக்கு மட்டும்!

பக்தர்களை எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறது
கைவிடப்பட்ட மைல்கல்!

மீன் சுவையில்
யாருக்கும் தெரியவில்லை
மீனவன் இரத்தவாடை!

பொருட்பெண்டிர்

சாய்ந்திருந்தால் அல்ல
எழுந்திருந்தால்தான்
எனக்கு ஓய்வு.

அவனுக்கு கவிதை
எனக்கு அமிலம்.

தினம்தினம்
தீக்குளித்தும்
கிட்டவில்லை
பத்தினிப்பட்டம்.

நான்குசுவர் நடுவே
விளைகின்றன
எனக்கான நெல்மணிகள்

எவனோ அருந்துகிறான்
என் குழந்தையின் 
உணவை!

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.